day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

கோவில் பிரசாதத்தில் முறைகேடு

கோவில் பிரசாதத்தில் முறைகேடு

சட்டசபை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட அறநிலையத்துறை அறிவிப்புகளின் செயல்பாடுகள் குறித்து, இணை, துணை கமிஷனர்களுடனான ஆலோசனைக் கூட்டம், அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பின் அவர் அளித்த பேட்டியில், ”சென்னை வடபழநி ஆண்டவர் கோவில் பிரசாத விவகாரத்தில், எந்த முறைகேடும் நடக்கவில்லை. அக்கோவிலில் வழங்கும் பிரசாதம் தரமானது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறைக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது”,என ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். மேலும், கோவில்கள் பாதுகாப்பிற்கென 10 ஆயிரம் பாதுகாப்புப் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அவர்களுக்குத் தேவையானபயிற்சிகள் வழங்கப்படும். கோவில்களின் தொன்மை மாறாமல் பராமரிப்பது குறித்த வழிமுறைகளைக் கொண்ட கையேடு வெளிடப்பட உள்ளது. ஐந்து ஆண்டுகளாக பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள், 1,500 பேர் பணிவரன்முறை செய்யப்படுவது குறித்து ஆலோசனை நடந்தது என தெரிவித்தார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!