day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சட்டவிரோத பணமோசடி வழக்கில், அமலாக்கத் துறையினா் அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்த நிலையில், நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட அவரை சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனர். அப்போது சென்னை முதன்மை அமா்வு நீதிபதி எஸ்.அல்லி மருத்துவமனைக்குச் சென்று செந்தில்பாலாஜியை சந்தித்த பின்னர், ஜூன் 28-ஆம் தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, இதய அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, காவேரி மருத்துவமனையில் இருந்து காணொலி காட்சி மூலம் கடந்த 28-ம் தேதி ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம், எப்படி இருக்கிறீர்கள் என நீதிபதி அல்லி கேள்வி எழுப்பினார். அதற்கு வலி இருப்பதாக செந்தில் பாலாஜி பதிலளித்தார். தொடர்ந்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூலை 12ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இந்த நிலையில், செந்தில்பாலாஜிக்கு ஜூலை 26-ம் தேதி வரை காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற காவல் இன்றுடன் முடிந்த நிலையில் 2-வது முறையாக நீட்டித்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். மருத்துவமனையில் இருந்து காணொளி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!