திருவள்ளூர் : திருத்தணி முருகன் கோவிலில் நேற்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார். பின்னர், இதுகுறித்து கூறுகையில் :- தமிழக முதல்-அமைச்சர் கடந்த 2021-ந் ஆண்டு சென்னை கலைவாணர் அரங்கில் “மீண்டும் மஞ்சப்பை” என்ற மக்கள் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். இதனையொட்டி, திருவள்ளூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மூலம் தொழிற்சாலைகள் நிதியுதவியுடன் 6 மஞ்சப்பை விற்பனை எந்திரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த மஞ்சப்பை விற்பனை எந்திரத்தில் ரூ.10 செலுத்தி ஒரு மஞ்சப்பையை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார்.