விழுப்புரம் : விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்கள் அடங்கிய காவல்துறையினருக்கான கலந்தாய்வு கூட்டத்தை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தினார். இதனையடுத்து, இன்று விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் சிறப்பாக சமூக சேவையாற்றிய 13 நபர்களுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் நினைவு பரிசுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதனை தொடர்ந்து, கடலூர், விழுப்புரம்,கள்ளக்குறிச்சி 3 மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் பற்றி ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.