புதுடெல்லி : இந்தியாவில் நேற்று 12,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று 11,692 ஆக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,48,57,992-லிருந்து 4,48,69,684 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 65,286-லிருந்து 66,170 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,31,230-லிருந்து 5,31,258 ஆக உயர்ந்துள்ளது.