சென்னை : தமிழ்நாட்டில் பகல் நேரங்களில் நிலவும் வெப்ப அலை காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியேற தயங்குகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்பநிலை 2 -3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் ஏப்ரல் 19 வரை 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் . தமிழ்நாடு, புதுச்சேரியில் 20,21- ஆகிய தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.