சென்னை : சென்னையை அடுத்த புழல் பெண்கள் சிறையில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நேற்று கைதிகளுக்கு சோதனை முறையில் ‘வீடியோ கால்’ வசதி தொடங்கப்பட்டது. இதனை சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் பூஜாரி தொடங்கி வைத்தார். இதன் மூலம் கைதிகள், ஒரு மாதத்தில் 10 முறை தங்கள் உறவினர்களை ‘வீடியோ கால்’ மூலம் தொடர்பு கொண்டு பேசலாம். ஒரு அழைப்புக்கு 12 நிமிடம் வரை பேசலாம். புழல் பெண்கள் சிறையில் முதன் முதலில் ஒரு மாதம் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ள இந்த வசதி, அதன் பிறகு அனைத்து சிறைகளிலும் ஏற்படுத்தப்படும் என போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.