16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் நேற்று மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வுசெய்தார். அதன்படி, பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. இறுதியில், பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 154 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. இறுதியில் 19.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து குஜராத் அணி வெற்றி பெற்றது.