day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

சென்னை, பள்ளிக்கரணையில் ரூ.20 கோடியில் சதுப்பு நில பாதுகாப்பு மையம் : பட்ஜெட் கூட்டத்தொடரில் புதிய அறிவிப்பு

சென்னை, பள்ளிக்கரணையில் ரூ.20 கோடியில் சதுப்பு நில பாதுகாப்பு மையம் : பட்ஜெட் கூட்டத்தொடரில் புதிய அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்ரல் 13) வனத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் மா.மதிவேந்தன் வெளியிட்ட புதிய அறிப்புகள்:- ரூ.20 கோடியில் திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் தேவாங்கு பாதுகாப்பு மையம், ரூ.15 கோடியில் தாஞ்சாவூர் மாவட்டம், மனோராவில் சர்வதேச கடல் பசு பாதுகாப்பு மையம் ,ரூ.20 கோடியில் சென்னை, பள்ளிக்கரணை சதுப்பு நில பாதுகாப்பு மையம் அமைக்கப்படும்.

மேலும், உலக புகழ் பெற்ற ராம்சார் தளமான வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் ரூ.9.3 கோடியில் இயற்கை சூழலில் மெருகூட்டப்படும்.
ரூ.6 கோடியில் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் உள்ள கூந்தகுளம் பறவைகள் சரணாலயம் ஒருங்கிணைந்த சூழலில் மேம்படுத்தப்படும். ரூ.3.7 கோடியில் பழவேற்காடு பறவைகள் சரணாலயலத்தின் சூழல் சுற்றுலாத் திறன் மேம்படுத்தப்படும் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரைவெட்டி பறவைகள் சரணலாயம் ரூ.1 கோடி செலவில் புனரமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!