சென்னை : நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்த மருத்துவம், ஆயுர் வேதம், யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 2023-24-ம் ஆண்டிற்கான நீட்தேர்வு மே 7-ந் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு எழுதவும் 499 நகரங்களில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த மார்ச் மாதம் 6-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந்தேதி நிறைவடைந்தது. அதையடுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்க 13-ந் தேதி (இன்று) வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (ஏப்ரல் 13) நிறைவு பெறுகிறது. மேலும் விவரம் அறிய 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.