day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

‘சட்டசபையில் இனி கவன ஈர்ப்புகள் நேரலை செய்யப்படும் என அறிவிப்பு ‘ : சபாநாயகர் அப்பாவு

‘சட்டசபையில் இனி கவன ஈர்ப்புகள் நேரலை செய்யப்படும் என அறிவிப்பு ‘ : சபாநாயகர் அப்பாவு

சென்னை: இன்று விருத்தாலசத்தில் 5 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரம் தொடர்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி, சட்டசபையில் தான் கேள்வி எழுப்பிய போது நேரலை நிறுத்தப்பட்டதாகவும், முதல்-அமைச்சர் அளிக்கும் பதில்கள் நேரலை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்தார்.

மேலும் எதிர்கட்சியினர் எழுப்பும் கேள்விகளை ஒளிபரப்பாமல் அமைச்சர்கள், முதல்-அமைச்சர் பதில் சொல்வதை மட்டுமே ஒளிபரப்புவதாக குற்றம் சாட்டி அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர். இது தொடர்பாக சட்டசபையில் விளக்கமளித்த சபாநாயகர் அப்பாவு, சட்டசபை நிகழ்ச்சி நிரலில் இடம்பெறக்கூடிய கவன ஈர்ப்புகள் இனி நேரலை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!