பெங்களூரு : கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி அறிவித்தது. அதன்படி சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் திட்டமிட்டபடி நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. தினமும் காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கி மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது.
மேலும், வேட்பாளர் மனு தாக்கல் செய்ய வரும்போது, 4 பேர் மட்டுமே வர அனுமதிக்கப்படுவர். ஆளும் பா.ஜனதா இன்னும் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவில்லை. காங்கிரஸ் 166 தொகுதிகளுக்கும், ஜனதா தளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கு ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்துவிட்டன.