சென்னை : நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை, நேரடியாகவும், காணொலி காட்சி மூலமாகவும் நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார். இந்த நடைமுறை ஏப்ரல் 10ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும், இந்த வசதியை வழக்கறிஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.