புதுடெல்லி : மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியதாவது:- இந்தியாவில் இதுவரை 214 கொரோனா வைரஸ் வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. சமீபத்திய உருமாறி உள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோய்களை சமாளிக்க அரசாங்கம் தயாராக உள்ளது. ஐசியூ படுக்கைகள், ஆக்ஸிஜன் சப்ளை மற்றும் பிற முக்கியமான பராமரிப்பு ஏற்பாடுகள் தயாராக வைக்கபட்டு உள்ளன.
இளைஞர்கள் மற்றும் ஆரோக்கியமானவர்களிடம் கூட அதிகரித்து வரும் மாரடைப்புகளுக்கான காரணம் குறித்து சுகாதார அமைச்சகம் கொரோனா உடன் இதற்கு ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து ஆராய ஆராய்ச்சியை குழுவை அரசு நியமித்துள்ளது.மேலும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார்.