day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

சுங்க கட்டண உயர்வு தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் : அமைச்சர் எ.வே வேலு விளக்கம்

சுங்க கட்டண உயர்வு தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் : அமைச்சர் எ.வே வேலு விளக்கம்

சென்னை : தமிழகத்தில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, ரூ.5 முதல் ரூ.55 வரை கட்டணம் உயரும் என தெரிகிறது. சென்னையை பொறுத்தவரை புறநகர் பகுதியில் உள்ள பரனூர், வானகரம், சூரப்பட்டு, செங்குன்றம், பட்டறை பெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்துள்ளது சுங்கச்சாவடி கட்டண உயர்வு தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:- தமிழகத்தில் இன்று 36 சுங்கச்சாவடிகளிலும் செப்டம்பரில் 22 சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்படுள்ளது. விதிகளின் படிதான் சுங்கசாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என மத்திய அரசு சொல்கிறது. சுங்க கட்டணம் உயர்வு தொடர்பாக மத்திய அரசுக்கு பல முறை கடிதம் எழுதப்பட்டுள்ளது. பராமரிப்புக்காக வசூலித்தாலும் 40 சதவீதத்திற்கும் குறைவாகவே வசூலிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!