புதுடெல்லி : சூரியனின் செயல்பாடு பற்றி நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் சூரியனின் பூமியை விட 20 மடங்கு பெரிய அளவிலான கருமையான பகுதி தென்படுவதை நாசா விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இது ‘கொரோனல் ஓட்டை’ என்று அழைக்கப்படுகிறது.
ஏனெனில் கொரோனல் ஓட்டையில் இருந்து புறப்படக்கூடிய மணிக்கு 2.9 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடிய சூரிய காற்றானது பூமியை நோக்கி வரும் என்றும், அது வெள்ளிக்கிழமை நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் பூமியின் காந்த புலம், செயற்கைகோள்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா? என்பதை பார்க்க விஞ்ஞானிகள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். சூரியனில் ஒருவாரத்தில் தோன்றிய 2-வது துளை இது ஆகும். சூரியனை ஆய்வு செய்யும் நாசாவின் சோலார் டைனமிக்ஸ் ஆய்வகத்தால் 2 துளைகளும் கண்டறியப்பட்டுள்ளன. கொரோனல் ஓட்டை தோன்றியதால் புவி காந்த புயல்கள் அல்லது சூரிய காற்று ஏற்படக்கூடும் என அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பான என்.ஓ.ஏ.ஏ. எச்சரிக்கை விடுத்துள்ளது.