பெங்களூரு: பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலை, தார்வார் ஐ.ஐ.டி. வளாகம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். மண்டியா, பெலகவரி, தார்வார் உள்ளிட்ட இடங்களில் அவர் ‘ரோடு ஷோ’வும் நடத்தினார்.
பிரதமர் மோடி 7-வது முறையாக இன்று(சனிக்கிழமை) கர்நாடகம் வருகிறார். சிக்பள்ளாப்பூரில் மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியை திறந்து வைக்கிறார். பின்னர் பெங்களூரு கே.ஆர்.புரம்-ஒயிட்பீல்டு இடையே சுமார் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி தாவணகெரேவுக்கு சென்று பா.ஜனதாவின் விஜய சங்கல்ப யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பெங்களூரு, சிக்பள்ளாப்பூர், தாவணகெரே ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.