day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 12 பேர் கைது : இலங்கை கடற்படை

ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 12 பேர் கைது : இலங்கை கடற்படை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் , ஜெகதாபட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து 200 விசைப் படகுகளில் சுமார் 1,000 மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் 12 பேர் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 32 நாட்டிக்கல் மைல் தொலைவில் இன்று அதிகாலை மீன்பிடித்துள்ளனர்.

எல்லை தாண்டி வந்ததாகக் கூறி 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததோடு, அவர்களது 2 விசைப் படகுகளையும் அந்நாட்டில் உள்ள காங்கேசன்துறை கடற்படை தளத்துக்கு கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர். இதனிடையே, கைது செய்துள்ள மீனவர்கள் மற்றும் சிறைபிடிக்கப்பட்டுள்ள 2 விசைப் படகுகளையும் மீட்டுத் தருமாறு ஜெகதாப்பட்டினம் மீனவர் சங்கத்தினர் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!