day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்க நாளை முதல் 10 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை: புதுச்சேரி அரசு

வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்க நாளை முதல் 10 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை: புதுச்சேரி அரசு

புதுச்சேரி: இந்தியாவில் ஹெச்3என்2 இன்புளுயன்சா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரைத் தான் அதிகம் தாக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவையில் கல்வியமைச்சர் நமச்சிவாயம் கூறியிறுப்பதாவது:- ”புதுச்சேரியில் வைரஸ் தொற்று பரவி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் ஆரம்ப பள்ளி முதல் 8 ம் வகுப்பு வரை அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் வரும் 16 முதல் 26 வரை விடுமுறை விடப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,”புதுச்சேரியில், அனைத்து மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கு என்று பிரத்தியேக புறநோய் சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. எவரேனும் காய்ச்சல் சளி, இருமல் தும்மல் போன்ற அறிகுறிகளோடு மருத்துவமனைக்கு வந்தால் அவர்களுக்கு ஹெச்3என்2 வைரஸ்-க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஆரம்பத்திலேயே பிரச்சனையை சரிசெய்துவிடலாம் என கூறியுள்ளார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!