புதுடெல்லி : நமது நாட்டில் தற்போது மருந்துகள் மற்றும் அழகு சாதனப்பொருட்கள் உற்பத்தியை ஒழுங்குபடுத்துகிற அதிகாரத்தை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் கொண்டுள்ளன. இந்த அதிகாரத்தை மத்திய அரசே எடுத்துக்கொள்ளும் வகையில் புதிய சட்ட மசோதா தயாராகி இருக்கிறது. அதே நேரத்தில் மருந்துகள், அழகு சாதனப்பொருட்கள், மருத்துவ சாதனங்கள் விற்பனையை மாநில அரசுகளே ஒழுங்குபடுத்தும். இதற்காக ‘புதிய மருந்துகள், மருத்துவ சாதனங்கள் மற்றும் அழகுசாதனப்பொருட்கள் மசோதா, 2023’ தயாராகி விட்டது. இந்த மசோதா தற்போது நடைமுறையில் இருந்து வருகிற ‘மருந்துகள், அழகு சாதனப்பொருட்கள் சட்டம் 1940’-க்கு மாற்றாக வருகிறது. இந்த மசோதா கடந்த ஆண்டு ஜூலை மாதம் பொதுவெளியில் விடப்பட்டு, தொடர்புடைய அனைவரின் கருத்துகளும் கோரப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.