திருவனந்தபுரம்: கடந்த 2002-ம் ஆண்டில் குஜராத்தில் கலவரம் ஏற்பட்டது. அப்போது மாநில முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்தார்.இந்த கலவரம் தொடர்பாக இங்கிலாந்து அரசு ஊடகமான பிபிசி, 2 பாகங்களாக ஆவண படத்தை வெளியிட்டிருக்கிறது. “இந்தியா-மோடிக்கான கேள்விகள்” என்ற தலைப்பிலான அந்த ஆவண படத்தில் பிரதமர் மோடி குறித்து எதிர்மறையான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனால் பிபிசியின் ஆவண படத்தை சமூக வலைதளங்கள், பொது இடங்களில் வெளியிட மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் , காங்கிரஸ் சார்பில் கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் பிபிசி ஆவண படம் நேற்று மாலை பொது அரங்கில் திரையிடப்பட்டது. கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமையிலான கூட்டணி அரசு பதவி வகிப்பதால், ஆவண படம் திரையிடப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. காங்கிரஸ் தலைவர்களின் நடவடிக்கைகளைக் கண்டித்து கட்சியின் அனைத்து பதவிகளையும் அவர் ராஜினாமா செய்துள்ளார்.