சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று இரவு 7.30 மணி அளவில் சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை எப்சி அணி , ஏடிகே மோகன்பகானுடன் மோதுகிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்றால் சென்னையின் எப்சி, எஞ்சியுள்ள ஆட்டங்களில் கணிசமான வெற்றிகளை பெற வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது.
சென்னையின் எப்சி தனதுகடைசி இரு ஆட்டங்களையும் டிராவில் முடித்திருந்தது. அதேவேளையில் 23 புள்ளிகளுடன் பட்டியலில் 4-வது இடம் வகிக்கும் ஏடிகே மோகன் பகான் அணி தனதுகடைசி ஆட்டத்தில் மும்பை சிட்டியிடம் தோல்வி அடைந்த நிலையில் தற்போது சென்னையின் எப்சி-யுடன் மோதுகிறது.