day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

மகாராஷ்டிராவில் ‘பைக்’ டாக்சிகளுக்கு தடை: அரசு உத்தரவு

மகாராஷ்டிராவில் ‘பைக்’ டாக்சிகளுக்கு தடை: அரசு உத்தரவு

மும்பை : மகாராஷ்டிராவில் கடந்த மாதம் பைக் டாக்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து புனேயில் ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மும்பை, புனே போன்ற பெருநகரங்களில் பைக் டாக்சி சேவைகள் சமீபகாலமாக நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து ரேபிடோ பைக் டாக்சி நிறுவனத்துக்கு புனேயில் பைக் டாக்சி சேவையை இயக்க அனுமதி மறுக்கப்பட்டது. ரேபிடோ நிறுவனம் பைக் டாக்சி சேவைக்கு உரிமம் வழங்க மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. ஆனால் பைக் டாக்சி சேவையை தற்காலிகமாக நிறுத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்தநிலையில் மகாராஷ்டிரா அரசு திடீரென பைக் டாக்சிகளுக்கு தடை விதித்து அரசாணை பிறப்பித்து உள்ளது. அதில் சாலை பாதுகாப்பை உறுதி செய்யவும், பொதுமக்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் இந்த தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பைக் டாக்சிகளுக்கு தடை விதித்து பிறப்பித்த அரசாணையை நேற்று மாநில அரசு மும்பை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது. இதையடுத்து பைக் டாக்சி உரிமம் கேட்டு ரேபிடோ நிறுவனம் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!