day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

“பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக பிரியங்கா மீது வழக்கு பதிவு”

“பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக பிரியங்கா மீது வழக்கு பதிவு”

விவசாயிகளுக்கு ஆதரவாக சென்ற பிரியங்கா காந்தி வதேரா மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கார் ஏற்றி கொல்லப்பட்ட விவசாயிகள் குடும்பத்தை சந்திக்கச் சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரை ஒரு தங்கும் விடுதியில், வீட்டுக் காவலில் வைத்து போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த பிரியங்கா காந்தி பிரதமர் மோடிக்கு காட்டமான கேள்விகளை எழுப்பியிருந்தார். அதில்

“விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்ட வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்த பிரியங்கா காந்தி, தம்மை கைது செய்த காவல்துறை, காரை விட்டு மோதியவர்களை ஏன் கைது செய்யவில்லை என்று பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியிருந்தார். தொடர்ந்து மற்றொரு பதிவில், விவசாயிகள் மீது கார் மோதிய வீடியோவை காண்பித்து, இந்த வீடியோவைப் பார்த்தீர்களா பிரதமரே.. உங்கள் அரசில் இடம்பெற்ற மத்திய அமைச்சரின் மகன் எவ்வாறு விவசாயிகளை வாகனத்தால் மோதுகிறார் எனப் பார்த்தீர்களா? இந்த வீடியோவை தயவுசெய்து பார்த்தும் , இந்த  அமைச்சரை ஏன் இதுவரை நீக்கவில்லை, அவரின் மகன் ஏன் கைது செய்யப்படவில்லை என்பதை விளக்குங்கள். என பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் அவர் மீது பொது அமைதிக்கு  குந்தகம் விளைவித்தாக பிரியங்கா உட்பட 10 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.உத்தரபிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள ஹர்கான் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!