திருமண மன முறிவுக்கு பிறகு சமந்தா சமூக வலைத்தளங்களில் தனது பெயரை மாற்றியுள்ளார்.
தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி சமந்தாவுக்கும்,தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்து – கிறித்துவ முறைப்படி இவர்களுடைய திருமணம் நடைபெற்றது. இருவரும் குடும்ப வாழ்கை தொடங்கிய நிலையிலும் தொடர்ந்து சமந்தா படங்களில் நடித்து வந்தார். அந்த வரிசையில் சமீபத்தில் அவரது நடிப்பில் ‘தி பேமலி மேன்’ என்ற வெப் தொடர் வெளியானது.
டிவிட்டரில் தனது பெயிரில் எஸ் என மாற்றியதில் இருந்து இருவரும் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்று பேசப்பட்டுவந்தன. ஆனால் இது குறித்து இருவரும் வாய் திறக்கவே இல்லை. வெறும் வதந்தியாக முடிந்துவிடும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கையில்
தங்களது திருமண உறவு முடிவுக்கு வந்திருப்பதை சமந்தாவும், நாக சைதன்யாவும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அறிவித்தனர்.
இதையடுத்து சமந்தா தற்போது தன்னுடைய டிவிட்டர் மற்றும் இன்ஸடாகிராம் பக்கங்களில் திருமணத்திற்கு முன்பிருந்ததைப் போல சமந்தா எனவும் யூசர் நேமை சமந்தா பிரபு எனவும் மாற்றியுள்ளார். நாக சைதன்யாவை திருமணம் செய்த பிறகு அவருடைய குடும்ப பெயரான அக்கினேனி என்ற பெயரை தனது பெயருடன் இணைத்து சமந்தா அக்கினேனி என்று வைத்திருந்தார். நாக சைதன்யாவுடன் உறவு முடிவுக்கு வந்ததையடுத்து தனது பெயரை சமந்தா என மாற்றியுள்ளார்.