day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

ஜன. 9-ல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் சட்டப்பேரவை கூடுகிறது

ஜன. 9-ல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் சட்டப்பேரவை கூடுகிறது

சென்னை: தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேரவைத் தலைவர் அப்பாவு நேற்று கூறியதாவது: வரும் ஜன. 9-ம் தேதி காலை 10 மணிக்கு, தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். அன்றே அலுவல் ஆய்வுக் குழு கூடி, ஆளுநர் உரை மீது எத்தனை நாட்கள் விவாதம் நடைபெறும் என்பதை முடிவு செய்யும். பொதுமக்கள் பாதுகாப்புக்காக முகக் கவசம் அணிந்து கொள்ளுமாறு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் மத்திய அரசு சில வாரங்களுக்கு முன் முகக் கவசம் தேவையில்லை என்று கூறிவிட்டு, தற்போது முகக் கவசம் அணியுமாறு கூறுகிறது.சட்டப்பேரவைக்கு எம்எல்ஏக்கள் முகக் கவசம் அணிந்து வரலாம். எனினும், கரோனா பரிசோதனை தேவையில்லை.

இந்தக் கூட்டத் தொடரில் ஆளுநர் உரை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். தற்போது கேள்வி நேரம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தொடர்ந்து, மற்ற நிகழ்வுகளையும் நேரடியாக ஒளிபரப்ப முயற்சித்து வருகிறோம்.கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலம் குறித்த சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டுள்ளது. அந்த மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் பெறப்படாமல் இருந்தது. பின்னர், முதல்வர் தலைமையிலான அமைச்சரவை, ஆயுள் முடியும் வரை கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலம் இருக்கட்டும் என்று கூறி, அந்த மசோதாவை திரும்பப் பெற்றது.

ஓபிஎஸ், பழனிசாமி விவகாரத்தில் சட்டப்பேரவையில் குறிப்புரை அளிக்கப்பட்டது. அதை யாரும் எதிர்க்கவில்லை. அவர்கள் குறிப்புரையை ஏற்றுக் கொண்டனர். ஒரு கட்சியின் கொள்கை சார்ந்த பிரச்சினையை அவர்கள்தான் பேசித் தீர்க்க வேண்டும். அவர்களுக்கு எதிராக அரசோ, சட்டப்பேரவையோ நடந்துகொள்வதில்லை. சட்டப்பேரவையில் பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு. 4 நாட்கள் பேரவைக் கூட்டம்?: பேரவையில் ஆளுநர் உரையாற்றியதும், அந்த உரையை பேரவைத் தலைவர் மு.அப்பாவு தமிழில் வாசிப்பார். தொடர்ந்து, அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெறும். பெரும்பாலும் 4 நாட்கள், அதாவது ஜன. 12-ம் தேதி வரை பேரவைக் கூட்டத்தை நடத்த முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது. அதன் பின்னர் பொங்கல் விடுமுறை வருவதால், அதுவரை மட்டுமே கூட்டம் நடத்த வாய்ப்புள்ளதாக தலைமைச் செயலக வட் டாரங்கள் தெரிவித்தன.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!