day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் – அதிபர் புதின் அறிவிப்பு

உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் – அதிபர் புதின் அறிவிப்பு

மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 300 நாட்களை கடந்துள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது. ரஷியா, உக்ரைன் நாடுகள் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று அதிரடியாக அறிவித்தார். இதுதொடர்பாக அதிபர் புதின் கூறுகையில், உக்ரைன் போர் தொடர்பாக அனைத்துத் தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். ஆனால், உக்ரைனும் அதன் ஆதரவு மேற்கத்திய நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தையை ஏற்க மறுக்கின்றன. உக்ரைனில் ரஷ்யா சரியான பாதையில் சென்று கொண்டுள்ளது. அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை பிளவுபடுத்த நினைக்கின்றன. நாட்டு நலனை காக்கவும், மக்களின் நலனை காக்கவும் நாங்கள் சரியான பாதையில் செல்கிறோம் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!