day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

பேரிடர் சேதங்களை அரசே ஏற்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

பேரிடர் சேதங்களை அரசே ஏற்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா சேதுபாவாசத்திரத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார், கழுமுகடாவைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவர்கள் சொந்தமாக மீன்பிடி படகுகள் வைத்துள்ளனர். இவர்களின் படகு 2018ல் கஜா புயலில் சேதமடைந்தது. இதற்கு முறையே ரூ.12 ஆயிரம், ரூ.17 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது. கூடுதல் இழப்பீடு கேட்டு இருவரும் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர்களின் படகுகள் லேசான சேதமடைந்துள்ளது. அதற்குரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதல் இழப்பீடு வழங்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில்: “தட்பவெப்ப நிலை மாறுதல் காலத்தில் வாழ்ந்து வருகிறோம். உலகம் முழுவதும் காலநிலை மாறுதல் இருந்து வருகிறது. எந்த நேரத்திலும் இயற்கை பேரிடர் வரும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இத்தகைய சூழலில் பேரிடர் சேதங்களை அரசு ஏற்க வேண்டும். அரசு தனது பொறுப்பை தட்டிக்கழிக்கக்கூடாது.

இயற்கை பேரிடருக்கான இழப்பீடு தொகையை உயர்த்தி அரசு 2019ல் அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி படகு முழுமையாக சேதமடைந்தால் ரூ.1.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். சேதத்தை ஆய்வு செய்யும் குழுவில் ஆய்வில், மதிப்பீடு செய்வதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் இடம்பெற வேண்டும். ஆய்வின் போது பாதிக்கப்பட்டவர் கண்டிப்பாக இருக்க வேண்டும். அவரை வைத்தே சேதங்களை மதிப்பீடு செய்ய வேண்டும்.
இந்த அளவு கோல் அடிப்படையில் மனுதாரர்களின் படகு சேதத்துக்கான மதிப்பீடு இல்லை. எனவே மனுதாரர்களுக்கு முறையே ரூ.1.38 லட்சம் ரூ.1.33 லட்சம் இழப்பீட்டு தொகையை 8 வாரத்தில் வழங்க வேண்டும்.” இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!