சென்னை: சென்னை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு வருகிற 12-ந் தேதி முதல் ஜனவரி 7-ந் தேதி வரை மாதவரம் கூட்டுறவு பணியாளர் பயிற்சி மையத்தில் நடக்கிறது.
மேலும், மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு திருத்தப்பட்ட வழிகாட்டி நெறிமுறையாக தமிழக அரசின் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரால் வழங்கப்பட்ட உதவிகள் பதிவு புத்தகம், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை மாற்றுத்திறனாளி உரிமைகோரலுக்கு ஆதாரமாக நேர்முகத் தேர்விற்கான சான்றிதழ் சரிபார்ப்பு குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும். இத்தகவலை சென்னை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத் தலைவர் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளனர்.