day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

23 அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.டி.அவசர மருத்துவ படிப்பு தொடக்கம் :அமைச்சர் மா.சுப்பிரமணியன்

23 அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.டி.அவசர மருத்துவ படிப்பு தொடக்கம் :அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: சென்னையில் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் எம்.டி. (அவசர மருத்துவம்) பட்ட மேற்படிப்பை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

செய்தியாளர்களிடம் கூறியதாவது;தமிழகத்தில் மொத்தம் 23 அரசு மருத்துவ கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 33 அரசு மருத்துவ கல்லூரிகளிலும் அடுத்த கட்டமாக தொடங்கப்படுவதாகவும் தற்பொழுது, 85 எம்.டி. அவசர மருத்துவ இடத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதில் 50 ஆயிரம் இடங்கள் மத்திய அரசும் 50 சதவீதம் மாநில அரசும் நிரப்பும், உலக வங்கயின் 6100 கோடி உதவியுடன் பட்ட படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் முதலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை மாநிலத்திலும் இந்த படிப்பு தொடங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!