புதுடெல்லி : மாநிலம் வாரியாக பஞ்சாயத்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரங்களை மத்திய பஞ்சாயத்துராஜ் இணை மந்திரி கபில் மொரேஷ்வர் பாட்டீல் நாடாளுமன்ற மக்களவையில் நேற்று எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார். ராஷ்டிரிய கிராம சுவராஜ் இயக்கத்தின் கீழ் மாநிலங்களுக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் திறன் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு ரூ.127.49 கோடி கிடைத்துள்ளது. மேலும் 2023-2024 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பஞ்சாயத்துகளை வலுப்படுத்த ரூ.895 கோடி நிதியும் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.