கெயில் இந்தியா லிமிடெட் மற்றும் அதன் குழுமத்தை சார்ந்த ஒன்பது நகர எரிவாயு விநியோக நிறுவனங்களால் 14 மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள 166 இயற்கை எரிவாயு நிலையங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் காணொலி வாயிலாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி கலந்துகொண்டார். இதில் பேசிய அவர், கடந்த 2014ஆம் ஆண்டு நாட்டில் 900 இயற்கை எரிவாயு நிலையங்களே இருந்ததாக தெரிவித்தார். ஆனால், தற்போது 4 ஆயிரத்து 500 இயற்கை எரிவாயு நிலையங்கள் இருப்பதாக கூறிய அவர், நாடு முழுவதும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாக அதாவது எட்டு ஆயிரம் இயற்கை எரிவாயு நிலையங்களாக உயர்த்தி அமைக்க நடைவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார்.