உலகில் மிக இளம் வயதில் புத்தகத்தை வெளியிட்ட சிறுவன், அபுதாபியைச் சேர்ந்த சயீத் ரஷீத் அல்மெய்ரி ( 4) . கடந்த மார்ச் மாதம் 9-ம் தேதி குழந்தைகள் விரும்பிப் படிக்கக் கூடிய ‘‘எலிஃபண்ட் சயீத் மற்றும் கரடியும்’’ என்ற புத்தகத்தை சிறுவன் சயீத் ரஷீத் வெளியிட்டான். இந்த புத்தகம் இரக்கம் மற்றும் இரு விலங்குகளிடையே எதிர்பாராத நட்பு பற்றிய கதையை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. புத்தகத்தை வெளியிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளான். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை எழுதி கின்னஸ் சாதனையில் இடம்பெற சயீத்துக்கு அவரது மூத்த சகோதரி அல்தாபி பக்கபலமாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.