day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேர் இலங்கை சிறையிலிருந்து விடுவிப்பு : நீதிமன்றம் உத்தரவு

புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேர் இலங்கை சிறையிலிருந்து விடுவிப்பு : நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு: புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடந்த மாதம் 28-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 5 விசைப் படகுகளை பறிமுதல் செய்து, 24 மீனவர்களையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை இலங்கையில் உள்ள மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து 24 பேரும் சிறையிலில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இலங்கை சிறையிலிருந்து புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து ஊர் காவல் துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர்கள் 10 ஆண்டுகளுக்கு இலங்கைக்குள் வர தடை விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுதலை செய்யப்பட்ட 24 மீனவர்களும் விரைவில் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!