day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

24 மணிநேரமும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் : அமைச்சர் செந்தில்பாலாஜி

24 மணிநேரமும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் : அமைச்சர் செந்தில்பாலாஜி

சென்னை : சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய சிவகங்கை சட்ட மன்ற உறுப்பினர் செந்தில் நாதன், சிவகங்கை மிக வறட்சியான மாவட்டமாக உள்ளது. விவசாயத்திற்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 18 மணி நேர மின்சாரம் என்பது 24 மணி நேரம் மும்முனை மின்சாரமாக வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில் :- ’24 மணி நேரம் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்பது முதலமைச்சரின் உத்தரவாக உள்ளது. மின் பகிர்மானத்திற்கான அடிப்படை கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் பணி முடிந்ததும் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார். மேலும், சிவகங்கை தொகுதியில் 3,232 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மற்ற கோரிக்கை குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பரிசீலிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!