15ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 42ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி எதிர்க்கொண்டது. மும்பை கிரிக்கெட் சங்கத்தின் மைதானத்தில் நடைபெற்ற இந்தஆட்டத்தில் பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்து ஆட்டத்தை தொடங்கியது. 20 ஓவர் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பஞ்சாப்க்கு லக்னோ நிர்ணயம் செய்தது. இதனையடுத்து களம் இறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்ததால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த தொடரில் இது லக்னோவின் 6ஆவது வெற்றியாகும். மேலும், புள்ளிப்பட்டியளில் 3ஆவது இடத்தில் உள்ள லக்னோ அணி இந்ததொடரில் இதுவரை 9 ஆட்டங்களில் போட்டியிட்டு 3 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.