மத்திய அரசு நிர்ணயித்த இலக்கை வெற்றிகரமாக அடைந்து விட்டதாக பிரதமர் பாராட்டு நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் 1,50,000 ஆயுஷ்மான் பாரத் சுகாதார மையங்களை அமைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்கு முன்பே இந்த சாதனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அரசின் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியால், பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை யதார்த்தமாகி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்காக நாடு முழுவதும் 86.90 கோடிக்கும் அதிகமானோர் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள் மூலம் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.