day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

100 அரங்குகள் கொண்ட மாபெரும் புத்தகத் திருவிழா நாளை தொடக்கம் : பொதுப்பணித்துறை அமைச்சர்

100 அரங்குகள் கொண்ட மாபெரும் புத்தகத் திருவிழா நாளை தொடக்கம் : பொதுப்பணித்துறை அமைச்சர்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், பொதுநூலக இயக்கம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் புத்தகத் திருவிழா திருவண்ணாமலை பழைய பைபாஸ் சாலையில் உள்ள காந்தி நகர் மைதானத்தில் நடைபெற உள்ளது. புத்தக திருவிழா தேதி மாற்றம் செய்யப்பட்டு நாளை முதல் 19-ந் தேதி வரை தொடர்ந்து 11 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதில் 100 புத்தகக்கடைகளுடன் கூடிய புத்தக அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.

இந்த புத்தகத்திருவிழாவினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நாளை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு தினமும் பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர், பேச்சாளர், சிந்தனையாளர்களின் சொற்பொழிவுகள் நடைபெறவுள்ளன. குழந்தைகளுக்கான விளையாட்டுகள், உணவுக் கூடங்கள், அரசு துறை அரங்குகள் என தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணிவரை இந்த புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது. புத்தகக்கண்காட்சியில் வாங்கும் புத்தகங்களுக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!