மேற்கு வங்க மாநிலத்தின் கூச் பெஹார் அருகே பிக்கப் வேனில் நேற்று இரவு சுமார் 27 பேர் பயணித்துள்ளனர். அப்போது அவர்கள் சென்ற வாகனத்தின் மீது திடீரென மின்சாரம் தாக்கியதில் 10 பேர் சம்வ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த 16 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து ஏற்பட்ட வானத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் சம்ப இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளார். வாகனத்தின் பின் பக்கத்தில் இருந்த ஜெனரேட்டரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் வாகனத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.