பெங்களூரு: பெங்களூருவில் உள்ள யலஹங்கா விமானநிலையத்தில் அடுத்த மாதம் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை 14 வது “ஏரோ இந்தியா 2023” கண்காட்சி நடைபெற இருக்கிறது. இதனால், விமானநிலையத்தைச் சுற்றி 10 கி.மீ., தூரத்திற்கு இறைச்சி கடைகளை மூடவேண்டும் என்று பெங்களூரு உள்ளாட்சி அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பிபிஎம்பி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தடைகுறித்து பிபிஎம்பி அதிகாரிகள் கூறுகையில், “பொது இடங்களில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளை உண்ண இயற்கையின் தூய்மை பணியாளர்களான கழுகு போன்ற பறவைகள் வருகின்றன. இதனால் வானில் வட்டமிட்டுபறக்கும் அதுபோன்ற பறவைகள் விமானங்களில் மோதி பாதிப்புகளை ஏற்றபடுத்த கூடும். இதனால், வரும் ஜன. 30 முதல் பிப். 20 வரை யலஹங்கா விமானநிலையதையெட்டி 10 கிமீ சுற்றளவிற்கு அனைத்து இறைச்சி, கோழி, மீன் கடைகளை திறக்கவும் அசைவ உணவகங்கள், ரெஸ்டாரண்ட்களின் அசைவ உணவு பரிமாறவும் விற்பனை செய்யவும் தடைவிதிக்கப்படுகிறது. இந்த உத்தரவினை மீறுவர்கள் மீது பிபிஎம்பி சட்டம் 2020, இந்திய வினமானச்சட்டம் 1937 பிரிவு 91 ன் கீழ் தண்டனை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள், இறைச்சிக்கடை உரிமையாளர்கள், அசைவ உணவுவிடுதி உரிமையாளர்கள் இவ்விதிமுறைகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
கர்நாடகா முதல்வர் பசராஜ் பொம்மை கூறியதாவது :- இந்தாண்டு நடைபெற இருக்கிற 14 வது ஏரோ இந்தியா கண்காட்சி, அதிக பங்கேற்பாளர்களுடன் மிகப்பெரிய கண்காட்சியாக நடைபெறும். இதில், பாதுகாப்புத்துறை தலைவர்கள்,விமான நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிவித்தார். இந்த கண்காட்சியில் பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த 633, வெளிநாட்டைச் சேர்ந்த 98 என மொத்தம் 731 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன என கூறியுள்ளார்.