day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

10ஆம் வகுப்பு தேர்வு தொடங்கியது

10ஆம் வகுப்பு தேர்வு தொடங்கியது

தமிழகம் முழுவதும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி வரும் 30ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுகளை தமிழகம் முழுவதும் உள்ள 3,936 தேர்வு மையங்களில் மொத்தம் 9.55.139 லட்சம் மாணவ மாணவிகள் எழுதுகின்றனர். இதில், 30,765 தனித் தேர்வர்கள் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். அதேபோல, புதுச்சேரியிலும் இன்று 10ஆம் வகுப்பு தேர்வை 16,802 மாணவர்கள் எழுதுகின்றனர். இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகல் 1.15 மணி வரை நடைபெற இருக்கிறது. மேலும் மாணவ மாணவிகள் காலை 9.45 மணியில் இருந்து தேர்வு அறையில் இருந்து வருகின்றனர். 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று தமிழ் தேர்வு நடைபெற்று வருகிறது. முன்னதாக நேற்று 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!