நாடாளுமன்ற அலுவல் மொழி கமிட்டியின் 37ஆவது கூட்டத்தின் போது அதன் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா, இந்தி மொழியை வளர்ப்பது குறித்து பேசிருந்தார். அதில், நாட்டின் ஒற்றுமையின் முக்கிய அங்கமாக அலுவல் மொழியை உருவாக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இந்தியை ஆங்கிலத்துக்கு மாற்றாக ஏற்க வேண்டும் என்று கூறியுருந்தார். அவரது இந்த கருத்துக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து இது தொடர்பாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வடக்கே வாழப்போன தமிழர், இந்தி கற்கலாம். தெற்கே வாழவரும் வடவர், தமிழ் கற்கலாம். மொழி என்பது தேவை சார்ந்ததே தவிர, திணிப்பு சார்ந்ததல்ல. வடமொழி ஆதிக்கத்தால், நாங்கள் இழந்த நிலவியலும் வாழ்வியலும் அதிகம். இதற்குமேலும் இந்தியா? தாங்குமா இந்தியா?” என்று எழுதி உள்ளார்.