day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

வருத்தத்தில் விஜய் ரசிகர்கள்…

வருத்தத்தில் விஜய் ரசிகர்கள்…

கோலார் தங்கவயலை மையமாகக் கொண்டு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட புனைவுக்கதையான கே.ஜி.எஃப் திரைப்படம் கன்னடத்தில், 2018ம் ஆண்டு வெளியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தத் திரைப்படம் பின்னர், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அப்போதும் வசூலை வாரிக்குவித்தது. இதனால் இப்படத்துக்கான 2வது பாகம் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், கே.ஜி.எஃப் படத்தின் 2வது பாகம் தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளியானது. ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் போக்கும்வகையில் இந்த முறை கே.ஜி.எஃப் 2ம் பாகம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது. இதையும் இயக்குநர் பிரசாந்த் நீலே உருவாக்கி இருந்தார். இப்படத்தில் யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் இப்படத்தின் முதல்நாள் வசூல் இந்தியா முழுவதும் ரூ.134.5 கோடி வசூலாகி இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த சந்தோஷத்துடன் அடுத்த சந்தோஷத்தையும் படக்குழு அறிவித்துள்ளது. அதாவது, கே.ஜி.எஃப்பின் படத்தின் 3வது பாகத்தையும் விரைவில் எடுக்கவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். கே.ஜி.எஃப்பின் வெற்றியாலும், வசூல் வேட்டையாலும் விஜய் நடித்த பீஸ்ட் படம் சோடைபோயிருக்கிறது என்கிற தகவலும் கசிந்திருக்கிறது. இதனால் விஜய் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்களாம்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!