day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

லாரி விபத்தில் ரூ.50 லட்சம் பெயிண்ட் வீண்

லாரி விபத்தில் ரூ.50 லட்சம் பெயிண்ட் வீண்

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கருமத்தம்பட்டி பேருந்து பணிமனை அருகே இருக்கும் பாலத்தின் மீது, ஐதராபாத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு பெயிண்ட் கொண்டு வந்த லாரி ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பாலத்தில் மீதிருந்து தலைகுப்புற கீழே விழுந்து விபத்துக்குள்ளானது‌. இதனையடுத்து லாரியில் ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீரென லாரி முழுவதும் தீ பற்றிக்கொண்டது. இந்த விபத்தில் லாரின் ஓட்டுநர் மற்றும் கிளீனர் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து தீயில் எரிந்து சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான பெயிண்ட் நாசமானது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து கருமத்தம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலத்தின் மீது இருந்து
லாரி ஒன்று தலைகுப்புறக் கீழே விழுந்து தீப்பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!