பல்வேறு நாடுகளில் நடைபெற்றுவரும் புரோ ஹாக்கி லீக் தொடரில், 9 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். இந்த நிலையில் இந்தியா – ஜெர்மனி அணிகள் இடையிலான முதலாவது லீக் ஆட்டம் நேற்று ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் நடைபெற்றது. இதில் 3-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி முதலிடம் பிடித்தது. 2 மற்றும் 3வது இடங்களில் ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய அணிகள் உள்ளன. இன்று நடைபெறும் லீக் போட்டியில் இந்தியா மீண்டும் ஜெர்மனியை எதிர்கொள்கிறது.