day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

மின் உற்பத்தி பாதிப்பு – மின்தடை ஏற்படும் அபாயம்

மின் உற்பத்தி பாதிப்பு – மின்தடை ஏற்படும் அபாயம்

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தின் இரு நிலைகளில் 5 அலகுகள் உள்ளது. இதில், முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட் மின் உற்பத்தியும், 2ஆவது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1200 என மொத்தம் நாளொன்றுக்கு 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தநிலையில், இரண்டாவது நிலையின் முதல் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக தற்போது அங்கு 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது இதனால் சென்னை புறநகர் பகுதிகளில் மின்வெட்டு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நிலக்கரி பற்றாக்குறையால்‌ தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி சரிந்து வரும் நிலையில் அடிக்கடி ஏற்படும் இதுபோன்ற பாதிப்புகளால் மின் உற்பத்தி மேலும் பாதிக்கப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் வருத்தம் தெரிவித்துவருகின்றனர்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!