கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடைபெற்ற தடகளம் மற்றும் குழுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தடகளப் போட்டிகளில் 4 பிரிவுகளின் கீழ் 50மீ , 100மீ, 200மீ, 400மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 100மீ சக்கர நாற்காலி, நின்ற நிலையில் தாண்டுதல் மற்றும் சாப்ட் பந்து எறிதல் போட்டியும் நடைபெற்றது. இந்தபோட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர் வழங்கினார்.