உக்ரைனுக்கு எதிராக முழுமையான போரை ரஷ்யா தொடர்ந்து வரும் நிலையில், போர் நிறுத்த பேச்சு வார்த்தைக்கு ரஷ்ய அதிபரை சந்திக்க விரும்புவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். முன்னதாக ரஷ்ய தலைவர்கள் வேறு யாரையும் சந்திக்க தான் விரும்பவில்லை எனவும் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். மேலும், உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டுவரும் ஒற்றை நோக்கத்துடனே ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார் ஜெலன்ஸ்கி. உக்ரைன் மக்களுக்கு எதிரான முழுமையான போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யா, உக்ரைன் மக்கள் வாழ்வதற்கான உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் பறித்துக்கொள்ளும் முடிவில் இந்த போரை நடத்தி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. இதனிடையே, உக்ரைனுக்கு உதவ 20 நாடுகள் முன்வந்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியாட் ஆஸ்டின் இதனை தெரிவித்துள்ளார். இதேபோல், உக்ரைனின் கடற்பாதுகாப்பை உறுதிப்படுத்த ஏவுகணை தாங்கிய போர் கப்பலை அனுப்ப உள்ளதாக டென்மார்க் அறிவித்துள்ளது.