தமிழகத்தில் வரும் வியாழக்கிழமை 14ஆம் தேதி தமிழ் வருடப்பிறப்பு மற்றும் 15ஆம் தேதி புனித வெள்ளி என அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதால், அதனைத்தொடர்ந்து அடுத்த நாளான சனிக்கிழமை 16ஆம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் வரும் 16ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.