fishersமீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடை காலமாக அமல்படுத்தப்பட்டு உள்ளது. அந்த வகையில், தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியான திருவள்ளூர் மாவட்டம் தொடங்கி குமரி வரை மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. மீன்வளத்தைப் பாதுகாக்கும் வகையில் இந்த தடை காலங்களில் மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரமாக உள்ள மீன்பிடி உபகரணங்களின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருவது வழக்கம். இந்த நிலையில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்ட மீனவர்களும் விசைப்படகுகளை அணிவகுத்து நிறுத்தி வைத்து உள்ளனர்.